Aanantha paadalgal paadiduven

ஆனந்த பாடல்கள் பாடிடுவேன் ( Aanantha paadalgal paadiduven


ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்
அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே - நல்
மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தார்

1.மேலோக நாடெந்தன் சொந்தமதே - இந்த
பூலோக நாட்டமும் குறைகின்றதே
மாயையில் மனமினி வைத்திடாமல் - நேசர்
காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன்

2.நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை
இயேசுநாதர் என்பக்கமாய் வந்தனரே
பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே - இந்தப்
பாரினில் என்னை வெற்றி சிறக்கச் செய்தே

3.அற்புதமாம் அவர் நேசமது - எந்தன்
போர்பரன் சேவையின் பாக்யமது
பற்பல கிருபைகள் பகருகின்றார் - ஏழை
கற்புடன் அவர் பணி செய்திடவே

4.பரம தேசம் கண்ணில் தெரிகிறதே - எந்தன்
நாதரின் தொனி காதில் கேட்கின்றதே
காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்
விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம்

5.அழைத்தவரே அவர்
உண்மையுள்ளோர் - தம்
அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்
உழைத்திடுவேன் மிக ஊக்கமுடன் - அங்கு
பிழைத்திடவே அன்பர் சமூகமதில்

6.ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள - தேவன்
என் பிதா ஆனதால் ஆனந்தமே
ஏறெடுப்போம் நம் இதயமதை - என்றும்
மாறாமல் பதில் தரும் மன்னனிடம்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes