Aaththumamae en mulu ullamae

ஆத்துமமே என் முழு உள்ளமே {Aaththumamae en mulu ullamae

ஆத்துமமே என் முழு உள்ளமே  - உன்
ஆண்டவரை தொழுதேத்து  - இந்நாள் வரை
அன்பு வைத்தாதரித்தே  - உன்
ஆண்டவரை தொழுதேத்து 

1.போற்றிடும் வானோர்  - பூதலத்துள்ளோர் 
சாற்றுதற் கரிய தன்மையுள்ள  -  ஆத்து

2.தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத  -  ஆத்து

3.தினம் தினம் உலகில் நீ செய்பவலான
வினை பொறுத்தருளும் மேலான  -  ஆத்து

4.வாதை , நோய் துன்பம் மாற்றி ஆனந்த
ஓதரும் தயை செய்துயிர் தந்த  வ்

5.உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடி சூட்டும்  -  ஆத்து

6.துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே
இதயமே , உள்ளமே , என் மனமே  -  ஆத்து

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes