En yesuve naan endrm

என் இயேசுவே நான் என்றும் {En yesuve naan endrm

என் இயேசுவே நான் என்றும்
உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும் வழி நடத்தும்

1.உளையான சேற்றினின்றே
தூக்கியே நிறுத்தினீரே
உந்தனை நான் மறவேன்
உந்தனை போற்றிடுவேன்  -  என்

2.அலைந்தோடும் கடலதனை
அடக்கியே அமர்த்தினீரே
வார்த்தையின் வல்லமையை
என்றுமே காணச் செய்யும்  -  என்

3.தாயினும் அன்பு வைத்தே
தாங்கியே காப்பவரே
ஜீவிய காலமெல்லாம்
உந்தனை பின் செல்லுவேன்   -  என்

4.அக்கினி சூளையிலே
 நின்ற எம் மெய் தேவனே
விசுவாசம் திட மனதும் 
என்றென்றும் தந்தருளும்   -  என்

5.ஆகாரின் அழுகுரலை 
அன்று நீர் கேட்டீரல்லோ
கருத்துடன் ஜெபித்ததுமே நான் 
உந்தனைத் தேடுகிறேன்   -  என்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes