என் இயேசுவே நான் என்றும் {En yesuve naan endrm
என் இயேசுவே நான் என்றும்
உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும் வழி நடத்தும்
1.உளையான சேற்றினின்றே
தூக்கியே நிறுத்தினீரே
உந்தனை நான் மறவேன்
உந்தனை போற்றிடுவேன் - என்
2.அலைந்தோடும் கடலதனை
அடக்கியே அமர்த்தினீரே
வார்த்தையின் வல்லமையை
என்றுமே காணச் செய்யும் - என்
3.தாயினும் அன்பு வைத்தே
தாங்கியே காப்பவரே
ஜீவிய காலமெல்லாம்
உந்தனை பின் செல்லுவேன் - என்
4.அக்கினி சூளையிலே
நின்ற எம் மெய் தேவனே
விசுவாசம் திட மனதும்
என்றென்றும் தந்தருளும் - என்
5.ஆகாரின் அழுகுரலை
அன்று நீர் கேட்டீரல்லோ
கருத்துடன் ஜெபித்ததுமே நான்
உந்தனைத் தேடுகிறேன் - என்
Post a Comment