Maangal neerodai vaanchithu

மான்கள் நீரோடை வாஞ்சித்து {Maangal neerodai vaanchithu

மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும்போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்துக் கதறுதே
தஞ்சம் நீர் அடைக்கலம் நீர் 
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்
 
1.தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாயிருக்கிறதே
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே   - தஞ்சமே
 
2.ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய்
அன்பரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்துப் போற்றிடுவோம்    - தஞ்சமே
 
3.யோர்தான் தேசத்திலும்
எர்மோன் மலைகளிலும்
சிறுமலைகளிலிருந்தும் உம்மை
தினமும் நினைக்கின்றேன்     - தஞ்சமே
 
4.கன்மலையாம் தேவன்
நீர் என்னை ஏன் மறந்தீர் 
எதிரிகளால் ஒடிங்கி அடியேன்
துக்கத்தால் திரிவதேனோ   - தஞ்சமே
 
5.தேவரீர் பகற்காலத்தில்
கிருபையைத் தருகின்றீர்
இரவினில் பாடும் பாட்டு எந்தன்
வாயினிலிருக்கிறது  -  தஞ்சமே

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes