ஓ இயேசு உமதன்பு-Oh yesu umathanbu
ஓ இயேசு உமதன்பு எத்தனை பெரியது
ஆகாயம் பூமி மலை
ஆழிகளுக்கெல்லாம் பெரியது
1.அளவில்லா ஆனந்தத்தால்
அகம் நிறைந்தது
ஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்தது
அன்றாடம் காலை
மாலையிலும் துதிக்க உயர்ந்தது - ஓ யேசு
2.சங்கட சமயங்களில்
மங்கியே வாடுகிறேன்
துங்கனே இரங்குமென
ஏங்கியே நாடுகிறேன்
பங்கமில்லாமல் பதிலளிப்பேன்
என்றதால் பாடுகிறேன்
என்றதால் பாடுகிறேன்
3.இருளாம் பள்ளத்தாக்கில்
மருகியே நடந்தாலும்
அருமெந்தன் மேய்ப்பாராய்
அருகிலிருப்பதாலும்
கருணையா லென்னைக் கரம் பிடித்தே
கர்த்தரே காப்பதாலும்
கர்த்தரே காப்பதாலும் - ஓ யேசு
4.குறைவுள்ளோனானாலும்
கூடவே இருக்கிறீர்
நிறைவாம் புல்தரைகளில்
மெதுவாக நடத்துகிறீர்
இறைவனாம் இயேசு எல்லாவற்றிலும்
திருப்தியாக்குகிறார் , திருப்தியாக்குகிறார்
5.தேவனுடைய வீட்டில் சித்தப்படி துதிப்பேன்
ஏக இருதயத்துடனே என்றுமதை மதிப்பேன்
ஆராதிக்க அருகாரம் இயேசு
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா ஆமென் - ஓ யேசு
Post a Comment