Pithave nandri solgirom

பிதாவே நன்றி சொல்கிறோம் {Pithave nandri solgirom

பிதாவே நன்றி சொல்கிறோம்
இயேசுவே நன்றி சொல்கிறோம்
தூய ஆவியே எங்கள் தெய்வமே
நன்றி சொல்கிறோம்
துதி ஆராதனை செய்கிறோம்  [2]

1.தேவன் அருளிய சொல்லி முடியா
ஈவுக்காய் ஸ்தோத்திரம்
நீர் செய்த எல்லா நன்மைக்கும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
எண்ணி முடியா அதிசயங்கள்
செய்தவரே ஸ்தோத்திரம்  [2]

2.கடந்த நாட்கள் கண்மணி
போல பாதுகாத்தீரே
சோதனையில் என்னைத் தேற்றியே
தைரியப்படுத்தினீரே
தீராத நோய்களெல்லாம்
தழும்புகளால் சுகப்படுத்தினீரே  [2]

3.சகல ஆசீர்வாதங்களாலே
ஆசீர்வதித்தீரே
குறைகளெல்லாம் நிறைவாக்கினீர்
செழிப்பாய் என்னை மாற்றினீர்
மனக்கவலை தீர்த்தீரே
மகிழ்ச்சியினால் நிரப்பினீரே   [2]

4.கல ஆசீர்வாதங்களினாலே ஆசீர்வதித்தீரே
குறைகளெல்லம் நிறைவாக்கினீர்
செழிப்பாய் என்னை மாற்றினீர்
மனக் கவலை தீர்த்தீரே
மகிழ்ச்சியினால் நிரப்பினீரே  [2]

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes