பிதாவே நன்றி சொல்கிறோம் {Pithave nandri solgirom
பிதாவே நன்றி சொல்கிறோம்
இயேசுவே நன்றி சொல்கிறோம்
தூய ஆவியே எங்கள் தெய்வமே
நன்றி சொல்கிறோம்
துதி ஆராதனை செய்கிறோம் [2]
1.தேவன் அருளிய சொல்லி முடியா
ஈவுக்காய் ஸ்தோத்திரம்
நீர் செய்த எல்லா நன்மைக்கும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
எண்ணி முடியா அதிசயங்கள்
செய்தவரே ஸ்தோத்திரம் [2]
2.கடந்த நாட்கள் கண்மணி
போல பாதுகாத்தீரே
சோதனையில் என்னைத் தேற்றியே
தைரியப்படுத்தினீரே
தீராத நோய்களெல்லாம்
தழும்புகளால் சுகப்படுத்தினீரே [2]
3.சகல ஆசீர்வாதங்களாலே
ஆசீர்வதித்தீரே
குறைகளெல்லாம் நிறைவாக்கினீர்
செழிப்பாய் என்னை மாற்றினீர்
மனக்கவலை தீர்த்தீரே
மகிழ்ச்சியினால் நிரப்பினீரே [2]
4.கல ஆசீர்வாதங்களினாலே ஆசீர்வதித்தீரே
குறைகளெல்லம் நிறைவாக்கினீர்
செழிப்பாய் என்னை மாற்றினீர்
மனக் கவலை தீர்த்தீரே
மகிழ்ச்சியினால் நிரப்பினீரே [2]
Post a Comment