Aathma kartharai thuthikkindrathe

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே (Aathma kartharai thuthikkindrathe


ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே  என்தன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே - இதோ
நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே
எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே

1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை
அனைவரும் பாக்கிய மென்பாரே
முடிவில்லா மகிமை செய்தாரே – பலம்
உடையவர் பரிசுத்தர் என்பாரே - இதோ

2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் – நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார்
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை
உகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார்

3.முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் 
அந்த முனியாபி ராமுட ஜனமதன்பால்
நட்புடன் நினை வொடு நல்லிசரேல் – அவன்
நலம்பெற ஆதரித்தார் மறவேல் - இதோ

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes