Naan kristhuvukul vaazhkindravan

நான் கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றவன் (Naan kristhuvukul vaazhkindravan


நான் கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றவன
நான் எந்நாளும் செழிப்பானவன்

1.கர்த்தர் என்
மேய்ப்பாராய் இருக்கின்றார்
என்றென்றும் தாழ்ச்சியடையேனே
என் நம்பிக்கை இயேசு தானே - 2

2.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகின்றார்
என் நம்பிக்கை இயேசு தானே - 2

3.அவர் அபிஷேகத்தால்
என்னை நிரப்புகின்றார்
என் பாத்திரம் நிரம்பி வழிந்திடுமே
என் நம்பிக்கை இயேசு தானே - 2

4.என்னை வாலாக்காமல்
ஏசு தலையாக்குவார்
என்னை கீழாக்காமல் ஏசு மேலாக்குவார்
என் நம்பிக்கை இயேசு தானே - 2

5.என் கைகளின் பலனை சாப்பிடுவேன்
பாக்கியமும் நன்மையும் உண்டாகுமே
என் நம்பிக்கை இயேசு தானே - 2

6.ஜீவனுள்ள நாளெல்லாம் பாடிடுவேன்
நன்மையும் கிருபையும் என்னை தொடரும்
என் நம்பிக்கை இயேசு தானே - 2

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes