அம்மையப்பன் உந்தன் அன்பே (Ammaiyappan unthan anbe
அம்மையப்பன் உந்தன்
அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உம்
உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை
இருப்பது நிரந்தரம்
நான் வாழ்ந்த பின்பும் உம்மில்
உயிர்ப்பதும் நிரந்தரம்
நிரந்தரம் [2] நீரே நிரந்தரம்
1.தாயின் அன்பு சேய்க்கு
இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு
நீரேநிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை
நீரே நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது
நீரே நிரந்தரம்
நிரந்தரம் [2] நீரே நிரந்தரம்
2.செல்வங்கள் கொணரும் இன்பத்தில்
இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது
இல்லை நிரந்தரம்
நிறைவாழ்வு என்னும் நிஜமான
நீரே நிரந்தரம்
அதன் விலையாக எனை நீர் உம்மில்
இணைப்பாய் நிரந்தரம்
நிரந்தரம் [2] நீரே நிரந்தரம்
Post a Comment