Wednesday, 18 July 2018

Nandri sollamal irukave mudiyathu

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது (Nandri sollamal irukave mudiyathu


நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி என்று
சொல்லி நான் துதிப்பேன்
நாள் தோறும் போற்றுவேன் -2

1.எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில்
செய்தாரே ஏராளமாய் நன்றி சொல்வேன்
அத்தனையும் நினைத்து நினைத்து
நான் துதிப்பேன் ஆண்டவரை போற்றுவேன் -2

2.மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும்
போதெல்லாம் பாதுகாத்தீர் ஐயா
மீண்டும் ஜீவனை கொடுத்து
நீர் என்னை வாழ வைத்தீர் ஐயா

3.தேவன் அருளிய சொல்லி முடியாத
ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம்
அளவில்லாத அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம்

No comments:

Post a Comment