Senaiyathiban nam karththarukke

சேனையதிபன் நம் கர்த்தருக்கே {Senaiyathiban nam karththarukke

சேனையதிபன் நம் கர்த்தருக்கே
செலுத்துவோம் கனமும் மகிமையுமே
அற்புதமே தம் அன்பெமக்கு  -  அதை
அறிந்தே அகமகிழ்வோம்  -  [2]

ஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்
ஜெயக் கீதங்கள் நாம் பாடியே
ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்
ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே

1.தாய் மறந்தாலும் நான் மறவேன் 
திக்கற்றோராய் விட்டு விடேன்
என்றுரைத்தெம்மைத் தேற்றுகிறார்
என்றும் வாக்கு மாறிடாரே  -  ஜெய

2.மேய்ப்பனில்லாத ஆடுகட்கே
நானே நல்ல மேய்ப்பன் என்றார்
இன்பச் சத்தம் பின் சென்றிடுவோம்
இன்பப் பாதை காட்டிடுவார்   - [2]

3.சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய
சத்தியம் நித்தியம் நிலத்தோங்க
சாத்தானின் சேனை நடுங்கிடவே  -  துதி
சாற்றி ஆர்ப்பரிப்போம்  -  [2]

4.கறை , திரை முற்றும் நீங்கிடவே
கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்
வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை
வழுவாமல் காத்துக் கொள்வார்   - ஜெய

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes