தொழுகிறோம் எங்கள் பிதாவே {Thozhugirom engal pithavae
தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்
1.வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர்
என்னையே மீட்டுக் கொண்டவர்
அன்னையே இதோ சரணம் சரணம் – தொழு
2.தலை தங்கமயமானவர்
தலை மயிர் சுருளானவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவர்
பதினயிரமாம் சரணம் சரணம் - தொழு
3.கண்கள் புறாக்கண்கள் போல
கன்னங்கள் பாத்திகள் போல
சின்னங்கள் சிறந்ததாலே
எண்ணில்லாத சரணம் சரணம் – தொழு
4.கரங்கள் பொன் வளையல் போல
நிறங்களும் தந்தத்தைப் போல
கால்களும் கல் தூண்கள் போல
காண்பதாலே சரணம் சரணம் - தொழு
5.சமஸ்த சபையின் சிரசே
நமஸ்காரம் எங்கள் அரசே
பிரதான எம் மூலைக் கல்லே
ஏராளம் சரணம் சரணம் - தொழு
6.அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத விஸ்தாரம்
கூடிவந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழு
7.பார்த்திபனே கன தோத்திரம்
கீர்த்தனம் மங்களம் நித்தியம்
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா ஆமென் ஆமென் – தொழு
Post a Comment