எந்தன் அன்புள்ள ஆண்டவர் {Enthan anbulla aandavar
எந்தன் அன்புல்ல ஆண்டவர் 
இயேசுவே நான்
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் 
உம்மைப் போல் ஒரு தேவனை 
பூமியில் அறிந்திடேன் 
உயிர் தந்த தெய்வமே நீர்
   ஆ ! ஆனந்தம் ஆனந்தமே
   அல்லும் பகலிலும் பாடிடுவேன்
    இயேசுவே எந்தன் ஆருயிரே
1.பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமி யாவுமே மாறிடினும் நீரோ
வாக்கு மாறாதவரே - ஆ
2.உயர் அடைக்கலத்தில் 
என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்
உம்மையல்லாதிப் பூமியில் 
யாரையும்  நம்பிடேன்
உயிருள்ள தெய்வமே நீர் -ஆ!
3.எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த வாலிப நாட்களிலே
இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
பரிசுத்த ஜீவியமே 
4.பொன் வெள்ளியுமோ பெரும் பேர் புகழோ
பண ஆஸ்தியும் வீணல்லவோ
பரலோகத்தின் செல்வமே என் அருள் இயேசுவே
போதும் எனக்கு நீரே -ஆ
Post a Comment