அல்லேலுயா, கர்த்தரையே { Alleluyah kartharaiye
1.அல்லேலுயா, கர்த்தரையே
ஏகமாய் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம்
பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய் கிரியை செய்யும்
வல்லோரைத் துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும்
இயேசுவைத் துதியுங்கள்
ராஜாதி ராஜனாம் இயேசுராஜன்
பூமியில் ஆட்சி செய்வார்
அல்லேலுயா , அல்லேலுயா
தேவனைத் துதியுங்கள்
2.தம்புரோடும் , வீணையோடும்
கர்த்தரைத் துதியுங்கள்
இரத்ததினால் பாவங்களைப்
போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் கைத்தாளமும்
முழங்கிட துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர்
இயேசுவைத் துதியுங்கள்
3.சூரியனே சந்திரனே
தேவனைத் துதியுங்கள்
ஒளியதனை எங்கள் உள்ளம்
அளித்தோரைத் துதியுங்கள்
அக்கினியே , கல்மழையே
படைத்தோரைத் துதியுங்கள்
அக்கினியால் கல்மனதை
உடைப்போரைத் துதியுங்கள்
4.பிள்ளைகளே வாலிபரே
தேவனைத் துதியுங்கள்
வாழ்வதனை அவர் பணிக்கே
கொடுத்து நீர் துதியுங்கள்
பெரியவரே , பிரபுக்களே
தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை இயேசுவுக்காய்
செலுத்தியே துதியுங்கள்
5.ஆழ்கடலே சமுத்திரமே
தேவனைத் துதியுங்கள்
அலையலையாய் ஊழியர்கள்
எழும்பினார் துதியுங்கள்
தூதர்களே , முன்னோடிகளே
தேவனைத் துதியுங்கள்
பரலோகத்தைப் பரிசுத்தர்கள்
நிரப்புவார் துதியுங்கள்
Post a Comment