Neenga enakku irukum pothu

நீங்க எனக்கு இருக்கும் போது (Neenga enakku irukum pothu


நீங்க எனக்கு இருக்கும் போது
கலங்கலப்பா - நான் - 2
கரம் பிடித்து நடத்தும் போது
பயமில்லப்பா - எனக்கு - 2
ஏற்ற நேரத்தில் எல்லாம் செய்வீரே
உம் பலத்த கரத்திலே
நான் அடங்கி இருப்பேனே

1.காகங்கள் ஒரு நாளும்
கவலைப்படுவதில்லை
களஞ்சியத்தில் ஒரு நாளும்
சேர்த்து வைப்பதில்லை
உம்மை நோக்கி கூவும்
அதற்கு உணவும் தருகிறீர்
என்னை நீர் மறந்து விடுவீரோ - 2
இயேசய்யா  இயேசய்யா

2.தடைகளெல்லாம் தகர்த்த
வழிகளை திறந்து
கோணலை நேராக்கி முன்னே நடக்கிறீர்
வாசலில் நுழைந்து
நன்மை பெற்றிடுவேன் நான்
வெற்றி சிறந்த தேவன் நீரே
இயேசய்யா இயேசய்யா - 2

3.துன்பங்கள் என்ன செய்யும்
தொல்லைகள் மறைந்தோடும்
மலைபோல் வருவதெல்லாம்
பனிபோல் நீங்கிடும்
நீதியின் சூரியனே
உம்மை நோக்கி பார்ப்பேன்
வெட்கமடைந்து போவதில்லையே - 2
இயேசய்யா இயேசய்யா - 2

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes