சந்தோஷம் பொங்குதே {Santhosam ponguthe
சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே
அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார் முற்றும்
என்னை மாற்றினார்
சந்தோஷம் என்னில் பொங்குதே
1. வழி தப்பி நான் திரிந்தேன் – பாவப்
பழியதைச் சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே
அழைத்தது என்னையே [2]
அந்த இன்ப நாளில் எந்தன்
பாவம் நீங்கிற்றே
2. சத்துரு சோதித்திட தேவ
உத்தரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார்
தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல இயேசு எந்தன்
சொந்தமானாரே
3. பாவத்தில் ஜீவிப்பவர்
பாதாளத்தில் அழிந்திடுவார்
நானோ பரலோகத்தில் நாளும்
பாடல் பாடிடுவேன்
என்னில் வாழும் இயேசுவோடு
என்றும் வாழுவேன்
Post a Comment