Athikaalaiyil um thiumugam thedi

அதிகாலையில் உம் திருமுகம் தேடி-Athikaalaiyil um thiumugam thedi


அதிகாலையில் உம் திருமுகம் தேடி
அர்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்கு தந்தேன் - அன்பு நேசரே

ஆராதனை ஆராதனை - 2
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான தேவனுக்கே

1.இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் 2
என் வாயின் வார்த்தையெல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும்

2.உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதய துடிப்பாக மாற்றும் 2
என் ஜீவன் நாட்களெல்லாம்
ஜெப வீரன் என்று எழுதும்

3.சுவிசேஷ பாரம் ஓன்றே
என் சுமையாக மாற வேண்டும் 2
என் தேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்ல வேண்டும்

4.உமக்குகந்த தூய பலியாய்
இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன் 2
ஆட்கொண்டு என்னை நடத்தும் 2
அபிஷேகத்தாலே நிரப்பும்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes