எந்தன் நாவில் புதுப்பாட்டு {Enthan naavil puthupaattu
எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார் [2]
ஆனந்தம் கொள்லுவேன்
அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில் - அல்
1.பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து
கொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னை
தேற்றினார் - ஆனந்
2.வாதை நோயும் வந்த போது
வேண்டல் கேட்டிட்டார்
பதைக் காட்டி துன்பமெல்லாம் நீக்கி
மீட்டிட்டார் - ஆனந்
3.சேற்றில் வீழ்ந்த என்னையவர்
தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு
மாற்றினார் - ஆனந்
4.தந்தை தாயும் நண்பர் உற்றார்
யாவுமாயினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை
சொல்லுவேன் - ஆனந்
5.இவ்வுலக பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண
காத்திருக்கிறேன் - ஆனந்
Post a Comment