Nesare um thirupatham

நேசரே உம் திருபாதம்-Nesare um thirupatham


நேசரே உம் திருபாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே - 2
ஆர்வமுடனே பாடித் துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே
அடைக்கலமே அதிசயமே
ஆராதனை ஆராதனை

1.உம் வல்ல செயல்கள்
நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதையா
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா
நல்லவரே வல்லவரே
ஆராதனை ஆராதனை

2.பலியான செம்மறி பாவங்கள் எல்லாம் சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே
பரிசுத்தமே படைத்தவரே
ஆராதனை ஆராதனை

3.எத்தனை இன்னல்கள் என் வாழ்வில்
வந்தாலும் உம்மைப் பிரியன் ஐயா
சித்தமே செய்து சாட்சியாய் வாழ்வேன்
நிச்சயம் நிச்சயமே
இரட்சகரே இயேசு நாதா
ஆராதனை ஆராதனை

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes