Paaduven paravasamaaguven

பாடுவேன் பரவசமாகுவேன் {Paaduven paravasamaaguven

பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே

1.அலையலையாய் துன்பம் சூழ்ந்து
நிலை கலங்கி ஆழ்த்துகையில்
அலைகடல் தடுத்து நடுவழி விடுத்து
கடத்தியே சென்ற கர்த்தனை   -  பாடுவேன்

2.என்று மாறும் எந்தன் துயரம்
என்றே மனமும் ஏங்குகையில்
மாராவின் கசப்பை மதுரமுமாக்கி
மகிழ்வித்த மகிபனையே

3.ஒன்றுமில்ல வெறுமை நிலையில்
உதவுவாரற்றுப் போகையில்
கன்மலை பிளந்து தண்ணீரைச் சுரந்து 
தாகம் தீர்த்த தயவை  

4.வனாந்திரமாய் வாழ்க்கை மாறி
பட்டினி சஞ்சலம் நேர்கையில்
வான மன்னாவால் ஞானமாய் போஷித்த
காணத மன்னா இயேசுவை 

5.எண்ணிறந்து எதிர்ப்பினூடே
ஏளனமும் சேர்ந்து தாக்குகையில்
துன்ப பெருக்கிலும் இன்ப முகம் காட்டி
ஜெயகீதம் ஈந்தவரை

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes