Sarva sirustikkum ejamanar

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானர்-Sarva sirustikkum ejamanar 


சர்வ சிருஷ்டிக்கும் எஜமானர் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மைப் போற்றிடுவோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்
ஆ ஆ ஆ அல்லேலூயா  7  ஆமென்

1.வானம் பூமி ஓழிந்து போனாலும்
உம் வார்த்தைகள் என்றும் மாறாதே
இவ்வாழ்க்கை அழிந்து மறைந்து போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான் ஆ ஆ

2.கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான் தொடாமல் காப்பீரே ஆ ஆ

3.எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இதயத்தை உம்மிடம்
படைக்கின்றோமே
ஏங்குகின்றோம் உம் ஆசீர் பெறவே ஆ ஆ

4.சபையின் அஸ்திவாரமும் நீரே
சபையின் தலையானவர் நீரே
சபையை போஷித்து பாதுகாத்தென்றுமே
சேர்த்துக் கொள்ள வருபவர் நீரே ஆ ஆ

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes