Theiveega koodarame

தெய்வீக கூடாரமே-Theiveega koodarame


தெய்வீக கூடாரமே - என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே
மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே

1.கல்வாரி திருப்பீடமே
கறைப் போக்கும் திரு இரத்தமே
உயிருள்ள பரிசுத்த ஜீவப் பலியாக
ஒப்புக்கொடுத்தோம் ஐயா - மகிமை

2.ஈசோப்புல்லால் கழுவும்
இன்றே சுத்தமாவோம்
உறைகின்ற பனிபோல
வெண்மையாவோம் ஐயா
உம் திரு வார்தையினால் - மகிமை

3.அப்பா உம் சமூகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா
எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட
ஏங்கித் தவிக்கின்றோம் - மகிமை

4.உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர்விடுவோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
அனல் மூட்டி எரிய விடும் ஐயா - மகிமை

5.தூபமாய் நறுமணமாய்
துதிகளை செலுத்துகிறோம்
எந்நாளும் எப்போதும்
எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம் - மகிமை

6.ஜீவனுள்ள புதிய
மார்க்கம் தந்தீர் ஐயா
மகா பரிசுத்த கூடாரத்திற்குள்ளே
மகிமையில் நுழைந்து விட்டோம் - மகிமை

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes