Theva kirubai endrumullathu

தேவ கிருபை என்றுமுள்ளது {Theva kirubai endrumullathu

தேவ கிருபை என்றுமுள்ளது
அவர் கிருபை என்றுமுள்ளது
அவரை போற்றி துதித்துப் பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்

1.நெருக்கப்பட்டோம் மடிந்திடாமல்
கர்த்தர் தாம் நம்மைக் காத்ததாலே
அவ்ர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது - தேவ

2.சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
முன் சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது -தேவ

3.அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட் செடி தன்னில் தோன்றிய தேவன்
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது -தேவ

4.காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது -தேவ

5.வெள்ளம் போல் நிந்தை 
மேற்கொள்ள வந்தும் 
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே 
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளது -தேவ

6.நித்திய தேவனாம் சத்திய பரன் தான் 
நித்தமும் நம்முடன் இருப்பதாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது -தேவ

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes