எந்தன் உள்ளம் புது கவியாலே {Enthan ullam puthu kaviyaalae
எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க
இயேசுவை பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கின்றேன்
அல்லேலூயா துதி அல்லேலூயா - எந்தன்
அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தரைக் கொண்டாடுவேன்
1.சென்ற காலம் முழுவதும் காத்தாரே - ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்
சுக பெலன் அளித்தாரே - அல்லேலூயா
2.சில வேளை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடுங் கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே -அல்லேலூயா
3.பஞ்ச காலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அடைக்கலம் அளித்தாரே -அல்லேலூயா
4.களிப்போடு விரைந்தெம்மை சேர்த்திட - என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினமும் காத்திருப்போம் - அல்லேலூயா
Post a Comment