தோத்திரம் செய்வேனே இரட்சகனைத் {Thothiram seivene ratchganai
தோத்திரம் செய்வேனே இரட்சகனைத்
தோத்திரம் செய்வேனே
பாத்திரமாக்க இம்மாத்திரம் கருணை வைத்த
பார்த்திபனை யூதக் கோத்திரனை என்றும்
1.அன்னை மரி சுதனை - புல் மீது
அமிழ்து கழுவதனை
முன்னனை மீதுற்ற சின்னக் குமாரானை
முன்னுரை நூற்படி இந்நிலத் தூற்றோனை
2.செம்பொன்னுருவானை தேசிகர்கள்
தேடும் குருவானை
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று பைம் பொன்மலர் தூவி
3.கந்தை பொதிந்த்வனை - வானோர்களும்
வந்தடி பணிபவனை
மந்தையர்க்கானந்த மாட்சியளித்தோனை
வானபரன் என்னும் ஞான குணவானை
Post a Comment