தேவ பிதா எந்தன் மேய்ப்பனல்லோ {Theva pitha enthan meippanallo
தேவ பிதா எந்தன் மேய்ப்பனல்லோ ?
சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே
ஆவலதாய் எனைப் பைம் புல்மேல்
அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார் - தேவ
1.ஆத்துமந் தன்னை குளிரப் பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்
2.சா நிழல் பள்ளத் திறங்கிடினும்
சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே
வானபரன் என்னோடிருப்பார்
வளை தடியும் கோலுமே தேற்றும்
3.பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென்றேற் படுத்தி
சுக தைலம் கொண்டேன் தலையை
சுகமாய் அபிஷேகம் செய்குவார்
4.ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும்
நேயன் வீட்டினில் சிறப்போடே
நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன்
Post a Comment