Yesu ennodu irupatha ninachitta

இயேசு என்னோடு இருப்பத நினைச்சிட்டா{ Yesu ennodu irupatha ninachitta 

இயேசு என்னோடு இருப்பத நினைச்சிட்டா
என்னுள்ளம் துள்ளுதய்யா
நன்றி என்று சொல்லுதம்மா
ஆ... ஆ...ஓ...ஓ...லலல்லா...லாலா ம்ம்...

1.கவலை கண்ணீரெல்லாம்
கம்ப்ளீட்டா மறையுதம்மா
பயங்கள் நீங்குதம்மா
பரலோகம் தெரியுதம்மா
அகிலம் ஆளும் தெய்வம் - என்
அன்பு இதய தீபம் - இயேசு என்

2.பகைமை கசப்பு எல்லாம்
பனிபோல மறையுதம்மா
பாடுகள் சிலுவை எல்லாம்
இனிமையாய் தோன்றுதம்மா - அகிலம்

3.உலக ஆசை எல்லாம்
கூண்டோடே மறையுதம்மா
உறவு பாசமெல்லாம்
குப்பையாய் தோன்றுதம்மா - அகிலம்

4.எரிகோ கோட்டையெல்லாம்
இல்லாமல் போகுதம்மா
எதிர்க்கும் செங்கடல்கள்
இரண்டாய் பிரியுதம்மா

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes