En uyire aandavarai potru

என் உயிரே ஆண்டவரைப் போற்று {En uyire aandavarai potru


என் உயிரே ஆண்டவரைப் போற்று
முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று

அவர் செய்த சகல உபகாரங்களை நீ
ஒருநாளும் மறவாதே
ஒரு போதும் மறவாதே

1.குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்
நோய்களை குணமாக்கி நடத்துகிறார்

2.படுகுழியினின்று விடுக்கிறார்
இரக்கத்தை முடியாக சூட்டுகிறார்

3.வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
நிறைவாக்கி நம்மை நடத்திச் செல்வார்

4.கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார்
காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார்

5.மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்
அதிசய செயல்கள் காண செய்தார்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes