நீர் சொன்னால் போதும் செய்வேன்-Neer sonnal pothum seiven
நீர் சொன்னால் போதும் செய்வேன்
நீர் காட்டும் வழியில் நடப்பேன்
உம் பாதம் ஒன்றே பிடிப்பேன்
என் அன்பு இயேசுவே
ஆராதனை இயேசுவுக்கே
ஆராதனை இயேசுவுக்கே - 2
1.கடலின் மீது நடந்திட்ட உம்
அற்புத பாதங்கள்
எனக்கு முன்னே செல்வதால்
எனக்கு இல்ல கவலை
காற்றையும் கடலையும் அதட்டிய
உம் அற்புத வார்த்தைகள்
எனக்கு முன்னே இருப்பதால்
எனக்கு ஏது கவலை
2.பாதை எல்லாம் அந்தகாரம்
சூழ்ந்து கொண்டாலும்
பாதை காட்ட நேசர் உண்டு பயமே இல்லையே
3.பார்வோன் சேனை எதிரில் வந்து
சூழ்ந்து கொண்டாலும்
பாதுகாக்க கர்த்தர் உண்டு
பயமே இல்லையே
Post a Comment