நேசருக்கேற்ற பாட்டொன்று (Nesarukketra paattondru
நேசருக்கேற்ற பாட்டொன்று பாடுவேன்
அகமகிழ்ந்தே ஆனந்திப்பேன் ஆராதிப்பேன் - நான்
1.உம் நேசம் பேரின்பமே
உம் நாமம் பரிமளமே
உம்மையே நேசிக்கிறேன்
உம்மிலே களிகூறுவேன்
2.சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே
கிச்சிலி மரத்தின் நிழலே
என் இதயத்தின் வாஞ்சை நீரே
3.நேசர் என்னுடையவரே
நான் அவர் உடையவனே (ளே)
மலர்ந்த முகம் பார்த்தேன்
மெல்லிய சத்தம் கேட்டேன்
4.வாரும் எந்தன் நேசரே
வயல் வெளி கிராமங்கள் செல்வோம்
நேசத்தின் உச்சிதங்களை
உமக்கென்று தந்திடுவேன் - என்
Post a Comment