Niththam niththam ummai naan

நித்தம் நித்தம் உம்மை நான் (Niththam niththam ummai naan

நித்தம் நித்தம் உம்மை நான்
நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்
நீர் செய்த நன்மை எண்ணி
ஓயாமல் துதிக்கிறேன்

நன்றி... நன்றி... 2

1.தாயைப் போல தேற்றி என்னை
அரவணைத்து மகிழ்கிறீர்
தந்தையைப் போல தோள்களிலே
அனுதினமும் சுமக்கிறீர்

2.கடந்து வந்த பாதைகளை
நினைத்து நினைத்து பார்க்கிறேன்
கண்ணீரோடு நன்றி சொல்லி
ஓயாமல் துதிக்கிறேன்

3.தாயின் கருவில் தோன்றும் முன்னே
முன் குறித்த தெய்வமே
நினைப்பதற்கும் மேலாய் என்னை
ஆசீர்வதித்த தெய்வமே

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes