சத்துருவின் கோட்டையை (Saththuuvin kottaiyai
சத்துருவின் கோட்டையை தகர்த்தெறியயூதா முதலில் செல்லட்டுமே
நம் தேசத்தின் நுகத்தை முறித்தெறிய
துதிக்கும் வீரர் எழும்பட்டுமே - 2
யூதாவின் செங்கோல்
துதியின் ஆளுகை
நம் தேவனின் இராஜ்யம்
என்றும் துதியின் இராஜ்யம்
1.யூதாவே நீ எழுந்து துதி
தேவ சமூகம் உன்னோடு தான்
துதிப்பதற்கே நீ அழைக்கப்பட்டாய்
துதி அபிஷேகம் உன்னோடுதான்
2.யூதாவே நீ சகோதரரால்
புகழப்படுவாய் என்றும்
உன் கரமும் உன் சத்துருவின்
பிடரியின் மேல் இருக்கும்
3.சமாதானத்தின் தேவனவர்
நம்மைவிட்டு நீங்க மாட்டார்
ஜாதிகளும் ஜனங்களுமே
நம்மிடத்தில் சேர்ந்திடுவார்
Post a Comment