Um pugalai paaduvathu

உம் புகழை பாடுவது (Um pugalai paaduvathu


உன் புகழைப் பாடுவது -என்
வாழ்வின் இன்பமையா
உம் அருளைப் போற்றுவது - என் வாழ்வின் செல்வமய்யா

1.துன்பத்திலும் இன்பத்திலும் - நல்
தந்தையாய் நீ இருப்பாய்
கண்ணயரக் காத்திருக்கும் - நல்
அன்னையாய் அருகிருப்பாய்
அன்பு எனும் அமுதத்தினை - நான்
அருந்திட எனக்களிப்பாய்
உன்னின்று பிரியாமல் - நீ
என்றும் அணைத்திருப்பாய்

2.பல்லுயிரைப் படைத்திருப்பாய் - நீ
என்னையும் ஏன் படைத்தாய்
பாவத்திலே வாழ்ந்திருந்தும் - நீ
என்னையும் ஏன் அழைத்தாய்
அன்பினுக்கு அடைக்கும் தாழ்
ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்
உன்னன்பை மறவாமல் - நான்
என்றும் வாழ்ந்திருப்பேன்

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes