Ummai nesikkiren yesuve

உம்மை நேசிக்கிறேன் இயேசுவே (Ummai nesikkiren yesuve

உம்மை நேசிக்கிறேன் இயேசுவே
என் இரட்சகா என் தேவா
உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா
நீரே என்றும் என் வாழ்வினில் தேவன்

1.பெலவீனம் வியாதி எனை சூழும்போது
பரிகாரி நீர் போதுமே
பரிசுத்தர் நீரே பாரில் வந்ததால்
பாவங்கள் பறந்தோடுதே
பரலோகில் நான் சேர வழியானீரே

2.நிழல் தேடி அலைந்தேன் நிழலானீர் தேவா
நிதம் உம்மை நான் பாடுவேன்
நிலையில்லா வாழ்வில் நீர்தானே என்னை
நினைவில் கொள்ளும் நாதனே
நீரன்றி யாருண்டு நான் பாடி மகிழ

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes