நீரின்றி வேறில்லை ஐயா (Neerindri verillai aiya
நீரன்றி வேறில்லை ஐயாஎல்லாமே நீர் தானே
உடலும் உள்ளமெல்லாம்
உயிரெல்லாம் நீர் தானே
உம்மை நாடி நாடி தினம் பாடி பாடி மகிழ்வேன்
உந்தன் பாதம் தேடி தினம் ஓடி ஓடி வருவேன்
1.துன்பவேளையில் வேண்டிடும் போது
நல்ல துணை நீரே
தாங்கா துயரில் தவித்துடும் போது
தாங்கும் பெலன் நீரே
எந்தக் காலத்திலும் உம்மை ஸ்தோத்தரிப்பேன்
எந்த வேளையிலும் நினைப்பேன்
ஒருஇமைப்பொழுதும் உம்மை மறந்திடாமல்
என் வாழ்வினில் இனி
2.பாவ பாதையில் பாரினில்
அலைய தேடி வந்தவரே
பாவி எனக்காய் சிலுவையில்
தொங்கி வாழ்வு தந்தவரே
உயிருள்ளவரை என் உன்னதரை
உயிரோடு கலந்திடுவேன்
இரவும் பகலும் இதயம் நிறுத்தி
இசை கானம் பாட
Post a Comment