பாடல் பாடி மகிழ்வேனே (Paadal paadi magizhvene
பாடல் பாடி மகிழ்வேனேதுதி அல்லேலூயா
பாவி என்னை மீட்டாரே துதி அல்லேலூயா
பாரில் வந்தாரே தந்தாரே
அன்பால் மீட்டாரே - பரிசுத்தரை
நித்தியரை பாடிப் போற்றுவேன்
அல்லேலூயா பாடுவேன் நான் - 4
1.மகிமையின் ராஜா அவர்
மகத்துவம் நிறைந்தவர்
மனமெல்லாம் நிறையுதே
மகிழ்ச்சியில் சிலிர்க்குதே
2.கனிவான மீட்பரவர்
கண்மணி போல் காப்பாரவர்
கீதங்களால் ஆராதிப்பேன்
ஐக்கியத்தில் ஆனந்திப்பேன்
3.நீதியுள்ள நீதிபரர்
மேக மீதில் வந்திடுவார்
நித்யானந்த வாழ்வினையே
எனக்காக தந்திடுவார்
Post a Comment