தந்தானைத் துதிப்போமே (Thanthani thuthipome
தந்தானைத் துதிப்போமே திருச்
சபையோரே கவி பாடிப்பாடி
விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக
1.ஓய்யாரத்துச் சீயோனே - நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித்துதி
செய்குவையே மகிழ்
கொள்ளுவையே நாமும்
2.கண்ணாரக் களித்தாயே -நம்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மெற் சோனா மாரிபோற் பெய்துமே
3.சுத்தாங்கத்து நற்சபையே - உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்ததே உயிர்வரம்
4.தூரம் திரிந்த சீயோனே - உனைத்
தூக்கி எடுத்துக் கரத்தினிலேந்தி
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து உன்னை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை
Post a Comment