Theva um naamathai paadi pugazhven

தேவா உம் நாமத்தைப் பாடி புகழுவேன் {Theva um naamathai paadi pugazhven

தேவா உம் நாமத்தைப் பாடி புகழ்வேன்
ஆனந்தம் ஆனந்தமே
நீர் செய்த நன்மைகள் ஆயிரம் ஆயிரம்
ஆனந்தம் ஆனந்தமே

ஏழைகளின் பெலனே எளியோரின் இராஜனே
திக்கற்ற பிள்ளைகளின் தேவனே

1.கேரூபின்கள் சேராபீன்கள் 
ஓய்வின்றிப் பாடிப்பேற்ற
துதிக்குப் பாத்திரரே
துதிகளின் மத்தியிலே வாசம் செய்திடும்
மகிமைக்குப் பாத்திரரே

2.காற்றையும் கடலையும் அதட்டி அமர்த்திய
அற்புத தேவன் நீரே
அக்கினி நடுவினில் வாசம் செய்திடும்
அதிசய தேவன் நீரே

3.ஜாதிகள் முழங்கால்கள் முடங்கிப் பணிந்திடும்
உன்னத தேவன் நீரே
நாவுகள் யாவுமே அறிக்கை செய்திடும் 
உத்தம தேவன் நீரே

Post a Comment

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes