உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் {Ummodu selavidum ovvoru nimidamum
உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்
வீணாக போகதையா
[என்னை] பெலவானாய் மாற்றுதையா
ஓ தேவ பிரசன்னம் ஆ என்ன ஆனந்தம் - 2
ஆகாயம் கொண்டு செல்லுதே - 2
1.வானத்திலே தூதர் எல்லாம்
பரிசுத்தரே என்று பணிகின்றார்களே
பூமியிலே மண்ணான நான்
உம் நாமம் வாழ்க என்று
தொழுகின்றேன் ஐயா
2.தாயானவள் தன் பாலனை
மறந்தாலும் நம்மை மறவாதவரே
தகப்பனைப் போல் இரக்கமுள்ள பரிசுத்தரே
உம்மை துதிக்கின்றேன் ஐயா
3.என் இயேசுவே உம் ஆவியால்
ஒரு விசையாய் என்னை நிரப்பிடும் ஐயா
உலகத்திலே உமக்காக நான்
உயிருள்ள நாள்வரையும் உழைக்கனும் ஐயா
Post a Comment